Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் திருநங்கைகள் போல் நடித்து வழிப்பறி செய்த 2 இளைஞர்கள் கைது

அக்டோபர் 13, 2019 12:23

கோவை: கோவையில் பெண் போல் வேடமணிந்து இளைஞரிடம் வழிப்பறி செய்த இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

கோவை அவினாசி சாலையில் தனியார் கல்லூரி அருகே நின்ற விக்னேஷ் குமார் என்ற இளைஞரை இரு பெண்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் அவரை தாக்கிவிட்டு பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பீளமேடு காவல்துறையில், திருநங்கைகள் இருவர் வழிப்பறி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

விசாரணையில் அவர்கள் திருநங்கைகள் கிடையாது என்றும் அவர்கள் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மற்றும் மணி என்பதும் தெரியவந்தது.

பெண்கள் போல வேடமணிந்து பணம் பறித்தால் யாரும் புகார் செய்ய மாட்டார்கள் என நினைத்து இவ்வாறு செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் இதே புகாரில் இப்பகுதியில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அதே பாணியில் ஒரு வழிப்பறி நிகழ்வு நடந்திருக்கிறது.

தலைப்புச்செய்திகள்